Wednesday 31 August 2011

சிலாபம் முன்னேஸ்வரம் மிருக பலி பூஜைக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு


இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டதுஇந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14  பெளத்த அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்றைய மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்ன தேரர் கூறினார்.

No comments: