யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மருத்துவப் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் நியமிக்கப் பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்வதில் பல அரசியல் தலையீடுகள் காரணமாக தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பணியாற்றினார்.
போராசியர் இரட்ணஜீவன் ஹூல் தன்னை துணைவேந்தராக நியமிக்க பல அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.