வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள் தான். போரால் பாதிக்கப்பட்டவர்கள். சிறிய படகுகளை வைத்துக்கொண்டு அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேண்டி இருக்கிறது.
தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர். இதனால், இலங்கைக் கடல் வளம் சேதமடைகின்றது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும்.
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்திய அரசு பல அரசியல் காரணங்களுக்காக பின்னிற்கிறது. அதனால் பாதிக்கப்படுவது இருநாட்டு மீனவர்கள் தான். இரு நாட்டுத் தமிழர்களைப் பிரிக்கும் அரசியலும் இதில் உண்டு.