Friday 29 March 2024

வடபகுதி மீனவர் பிரச்சனையும் அரசியலும் !!!

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள் தான். போரால் பாதிக்கப்பட்டவர்கள். சிறிய படகுகளை வைத்துக்கொண்டு அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேண்டி இருக்கிறது.  

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர். இதனால், இலங்கைக் கடல் வளம் சேதமடைகின்றது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும்.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்திய அரசு பல அரசியல் காரணங்களுக்காக பின்னிற்கிறது. அதனால் பாதிக்கப்படுவது இருநாட்டு மீனவர்கள் தான். இரு நாட்டுத் தமிழர்களைப் பிரிக்கும் அரசியலும் இதில் உண்டு.

Tuesday 7 April 2020

யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருகிறது

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசி மூலம் உரையாடி இதனை உறுதி செய்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 22ம் திகதி விவேகானந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விவேகானந்தன் இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா நோயுடன் இலங்கை வந்த சுவிஸ் போதகரை தொழில் நிமித்தம் சந்திக்க சென்ற வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sunday 5 April 2020

இலங்கையில் கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் நால்வருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 166 ஆகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே இந்த பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

Saturday 6 September 2014

என் கனவு தேசம் My Dream State

கற்பனையில் மட்டுமே சாத்தியமான, நான் கனவு காணும் ஒரு நல்லாட்சி நடக்கும் நாட்டின் அமைப்பும் அதன் இயல்புகளும் - Special Features of My Dream State with Good Governance

இலங்கைத் தமிழர்கள் யார்?

இலங்கைத் தமிழர்கள் பல வகையினர். தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள், முக்குவச் சட்டத்திற்கு உட்பட்ட மட்டக்களப்புத் தமிழர்கள், இந்திய வம்சாவளியாக வந்து மலையகத்தில் பெருமளவில் குடியேறி இலங்கைப் பிரஜைகளான மலையகத் தமிழர்கள் ஆகியோர் பெரும்பான்மையினர். செட்டித் தமிழர்கள், தமிழ் பறங்கியர், தமிழ் மலாயர்கள், மலையகம் சாராத இந்திய வம்சாவழித் தமிழர்கள், வன்னித் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், நிகம்பு தமிழர்கள் என பல வகையினர் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்கள் என்போர் ஈழத் தமிழர்களையும், ஈழத் தமிழர்கள் என்போர் வடபகுதி தமிழர்களையும் குறிப்பாக யாழ் தமிழர்களையும் சுற்றியே சரித்திர ரீதியான பதிவுகள் குறித்து நிற்கிறது.

Monday 19 September 2011

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 தமிழர்கள் தெரிவு


நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வேறுவேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.

முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன. நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் ஒன் அறைவல் வீசா முறை ரத்து


மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் ஒன் றைவல் விசா வசதி வழங்கப்படும். 

78 நாடுகளின் பிரஜைகள் ஒன்லைன் முறையில் இணையம் ஊடாக விசா பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் றைவல் விசா முறை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கைக்கான குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Saturday 10 September 2011

நீதியாகச் செயற்படத் தயாரில்லாத சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக ஒய்வு பெற்ற கல்வி அதிகாரியான ஆனந்தராஜ் விருப்பு வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ் தேசியக் ட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு முன்னர் எடுத்த முடிவின் பிரகாரம் கூடிய விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்டவரே தலைவரென்ற அடிப்படையில் ஆனந்தராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் இது வரை சத்தியப்பிரமாணத்தினை செய்யாது விலகி இருந்து வருகின்றார். இதனால் கூட்டத்தினை கூட்டமுடியாது குழப்ப நிலை தொடர்கின்றது. போதிய பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான தீர்மானமெதனையும் சபை எடுக்க முடியாது உள்ளது.

மக்களால் நிராகருக்கப் பட்டவர் சர்வாதிகாரமாக பதவியைப்பெற முயற்சி. மகிந்தவை தாக்குவதற்கு தகுதியுடையவரா?

மீண்டும் குழப்ப அரசியலுக்குள் தமிழ் தரப்பு

எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பின் போது கிறிஸ் பேய் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மீண்டும் குழப்ப அரசியலை நடாத்த தமிழ் தரப்பு ஆரம்பித்துள்ளது. ஆனந்தசங்கரி தலைமை தாங்கிய போதே அது குழப்பமாகும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். கடந்த வாரம் இந்தியாவில் தமிழரின் தீர்வு தொடர்பிலும் அவர் குழப்பியது தெரிந்ததே

கூட்டமைப்பு ஆனந்தசங்கரிக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறதா

மக்கள் போராடத் தயாராக உள்ள ஒரு கால கட்டத்தில் அதற்கு தலைமை தாங்க கூட்டமைப்பு தயாராகவில்லை. 1977இல் இளைஞர்களுக்கு தலைமை தாங்காமல் வழிநடாத்தாமல் போனதால் கூட்டணி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு கொண்டுள்ளதா

வேறு யாரும் இல்லை என்பதற்காக தகுதியில்லாதவர்கள் இடைவெளியை நிரப்ப முடியுமா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் இது.