Saturday, 26 March 2011

மன்னாரில் மீண்டும் சிங்களப் பாடசாலை ஆரம்பம்

நீண்ட  கால  இடைவெளியின்  பின் மன்னார்  மடு  வீதியில் அமைந்திருந்த சிங்கள  மகா  வித்தியாலயம்   நேற்று  முன்தினம்  மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  சுமார் 26 வருடங்களின்  பின் அப்பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அப்பாடசாலையில் உயர்தரம் வரையான வகுப்புகள் செயற்பட்டன. அதன்  பின் வந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரஸ்தாப பாடசாலை 1985ம் ஆண்டுகளில் மூடப்பட்டது. 

No comments: