Friday 25 March 2011

புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய

ஸ்ரீ லங்காவின்  புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 25ம்  திகதி  முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த  நியமனம்  வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளராக இருந்த தயானந்த திஸாநாயக்க ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

சிறிலங்காவின் புதிய தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய தற்போது பிரதித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

சிறிலங்கா அரசின் அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேறிய பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் சகோதரரே, புதிய தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த தேசப்பிரிய என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள  தேர்தல்  ஆணையாளர்  தயானந்த திசநாயக்க  நீண்ட காலமாகவே  தன்னை இந்தப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரி வந்தார். 

No comments: