வடக்கின் கடைசி செஞ்சிலுவைச் சங்க அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. சுமார் 14வருட செயற்பாட்டின் பின் அந்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
வடக்கில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்க அலுவலகமான வவுனியா அலுவலகமே 25ம் திகதியுடன் மூடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவல்களை கொழும்பில் இருந்து மேற்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அதன் கிளை அலுவலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தன.
கடந்த பெப்ரவரி மாதத்தின் கடைசிப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த அதன் அலுவலகமும் மூடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment