Wednesday 23 March 2011

ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமான வரி அறவிட அரசு தீர்மானம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமானவரி அறவிடப்படவுள்ளது. வரவு  செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி  சகல  கொடுப்பனவுகளுடன்  ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட  சம்பளம்  பெறும்  சகல  அரச  ஊழியர்களும் வருமான  வரி செலுத்த  வேண்டியுள்ளது.

1978
ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களது வருமான வரி நீக்கப்பட்டிருந்தது. 33 வருடங்களின்  பின்  மீண்டும்   வருமான  வரி  செலுத்தும்  நடைமுறை  அரச ஊழியர்களுக்குக்  கொண்டு  வரப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்  நடைமுறைக்கு வரும்  இந்த  சட்டத்தின்  பிரகாரம், 50,000 ரூபாய்களுக்கு  மேல் மாத வருமானம் பெறுபவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டும்.

50,000 ரூபாயில் இருந்து 91,667 ரூபாய்கள் வரை மாத வருமானம் பெறுபவர்கள் 4 விகிதமும், 91,667 ரூபாயில் இருந்து 133,333 ரூபாய்கள் மாத வருமானம் பெறுபவர்கள் 8 விகித வரியும் செலுத்த வேண்டும்.

அதேசமயம், 133,333 ரூபாயில்  இருந்து 175,000 ரூபாய்கள்  வரை  மாத வருமானம் பெறுபவர்கள் 12 விகிதமும், 175,000 ரூபாயில் இருந்து 216,667 ரூபாய்கள் மாத வருமானம் பெறுபவர்கள் 16 விகித வரியும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: