நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக எரிக் சொல்ஹெய்;ம் இந்த சந்திப்பினை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செய்வதற்கும், காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் புலம்பெயர் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படுத்த துணைய புரியத் தயார் எனவும் நோர்வே அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, இந்தத் திட்டத்தை நோர்வே புலிச் செயற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment