Monday 28 March 2011

போரினால் கிழக்கில் 13,000 மக்கள் அங்கவீனமடைந்துள்ளனர்

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அரச தரப்பு இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

திருமலை மாவட்டத்தில் 660 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 689 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 1,005 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,030 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 671 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 1,105 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 884 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,650 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர், 594 பேர் பல்வேறு வகையான பாதிப்புக்களால் சுயமாக இயங்கமுடியாத நிலையில் உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 635 பேர் பார்வைப்புலத்தை இழந்துள்ளனர், 417 பேர் பேசும் மற்றும் கேட்கும் சக்தியை இழந்துள்ளனர், 780 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,650 பேர் இயங்கும் சக்தியை இழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: