Monday 29 August 2011

பெண் ஒருவர் தீக்குளித்து மரணம்!

தன்னார்வக் குழுவான காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பின் முழு நேர உறுப்பினராக உள்ள காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங் கொடி ( வயது 27) என்பவர் இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.


21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments: