Thursday 25 August 2011

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலிலேயே இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது தனியாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அதற்கு பாராளுமன்றின் அங்கீகாரம் தேவையில்லை. 

அரசு அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துக்களை பயங்கரவாதத் தடைச் சட்ட துக்குள் சேர்க்கவுள்ளதாகத் தெரிகிறது.

No comments: