Tuesday 30 August 2011

தூக்குத் தண்டனையைஎட்டு வாரங்கள் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான  மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தூக்குத் தண்டனையை எட்டு வாரங்கள் நிறுத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  

தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

No comments: