Saturday 10 September 2011

மீண்டும் குழப்ப அரசியலுக்குள் தமிழ் தரப்பு

எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பின் போது கிறிஸ் பேய் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மீண்டும் குழப்ப அரசியலை நடாத்த தமிழ் தரப்பு ஆரம்பித்துள்ளது. ஆனந்தசங்கரி தலைமை தாங்கிய போதே அது குழப்பமாகும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். கடந்த வாரம் இந்தியாவில் தமிழரின் தீர்வு தொடர்பிலும் அவர் குழப்பியது தெரிந்ததே

கூட்டமைப்பு ஆனந்தசங்கரிக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறதா

மக்கள் போராடத் தயாராக உள்ள ஒரு கால கட்டத்தில் அதற்கு தலைமை தாங்க கூட்டமைப்பு தயாராகவில்லை. 1977இல் இளைஞர்களுக்கு தலைமை தாங்காமல் வழிநடாத்தாமல் போனதால் கூட்டணி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு கொண்டுள்ளதா

வேறு யாரும் இல்லை என்பதற்காக தகுதியில்லாதவர்கள் இடைவெளியை நிரப்ப முடியுமா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் இது.

No comments: