இலங்கையில் காணாமல் போனோர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு (ஆவணி 30) விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசும் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.
No comments:
Post a Comment