Wednesday 7 September 2011

யுத்தக் குற்றத்திற்காக



ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் யுகஸ்லாவிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மொம்சிலோ பெரிசிக் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொஸ்னியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மொம்சிலோ பெரிசிக் நேரடியாக படுகொலைகளையோ அல்லது வேறும் சித்திரவதைகளையோ மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் தொலைவில் இருந்து சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments: