நயினாதீவு விகாரையில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப் படவுள்ளதாக வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் சுசித வீரசேகர தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக நயினாதீவு விகாரையை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது.
அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. சுமார் 4 கோடி ரூபா செலவில் இந்தப் புனரமைப்பு வேலைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியிது.
ஏற்கனவே, சங்கமித்தை வந்து இறங்கிய இடம் எனக் கூறும் மாதகலின் சம்பில்துறையில் 2004ம் ஆண்டில் பௌத்த விகாரையொன்றை கடற்படை அமைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment