தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு கடந்த வருடங்களில் 66 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டு இருந்தார்கள். தற்போது அரசால் அவ்வெண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று சங்கரி தரப்பில் கூறப்படுகின்றது.
ஆனந்தசங்கரியின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி சந்திரிக்காவின் காலம் தொட்டு அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் தேவைப்படும் பட்சத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவருடைய பாதுகாப்புப் பணியில் நிரந்தரமாக அறுபத்தி ஆறு போ் கடந்த காலங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அத்துடன், அவர்கள் பயணம் செய்வதற்கான வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான முக்கியமான மிதவாத் தலைவராக சர்வதேசம் அவரை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், அதனை வைத்து அரசாங்கம் அரசியல் லாபம் கண்டிருந்தது. அதன் காரணமாக அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலும் அதிகரித்திருந்தது.
No comments:
Post a Comment