Thursday 17 February 2011

யாழ் மீனவர்களின் பிரச்சனை; அரசாங்கங்களின் சதி; மீனவர்கள் பலி

சிறீலங்கா, இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை  சிலரின்   உதவியுடன்  அரங்கேற்றி  யுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த  செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாண  மீனவர்கள் பலியானார்களா? அல்லது  பலியாக்கப்பட்டனரா? என்ற  கேள்வி எழுந்திருக்கின்றது.

வடபகுதிக்  கடல் எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை மீறுவது, உரிய  கடற்  கலங்களைப்  பாவிக்காது  மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் மீனவர்களை  மிகவும்  பாதித்து  வருவது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அதனையே  காரணமாகக் கொண்டு  தமிழ்  மீனவர்கள் மத்தியில் பிரச்சினையை உண்டாக்க முயலும்  அரசாங்கங்களின்  கபடத்தனத்தை அடையாளம் காண வேண்டும்.

வழமையாக எல்லையிலேயே  சுட்டுத்தள்ளும் சிறீலங்கா கடற்படையினர், அவர்கள் பருத்தித்துறை கடல் எல்லைக்கு வரும்வரை அனுமதித்தமை, அதன் பின்னர் ஒருசில யாழ் மீனவர்கள் மூலமாக தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்தமை, பொலிசாரிடம்  கையளித்தமை, இதில் கடற்படையினர்  சம்பந்தப்படவில்லை  என  தொடராக  வரும்  செய்திகள்   சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மீனவர்கள்  தமக்கிடையிலான மீன்பிடிப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க  அனுமதிக்க  வேண்டும்.  இரு தரப்பினரையும் மோதவிட்டு  எதையோ  ஒன்றை  சாதிக்க   அரசாங்கம் நினைக்கின்றது. இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்தால், இரு தரப்பிற்கும் இடையிலான  உறவில் கசப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது ஈழத்தமிழ் மக்களிற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழுணர்வாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

தேர்தல்  நாடகத்திற்காக  தமிழ்  மீனவர்கள்  கைதும், தி.மு.க ஆர்ப்பாட்டமும்  திட்டமிடப்பட்டு  அரங்கேரியும்  இருக்கலாம். இன்னும்  பல  நடக்கலாம்.  தமிழர்கள்  பலியாகலாம். 

ஆனால், யாழ்    மீனவர்களின்  பிரச்சனையும் மறைக்கப்பட  முடியாதது.  தீர்வு  காணப்பட  வேண்டியது.  

No comments: