Saturday 12 February 2011

தமிழர்களைத் திருப்பி அனுப்புவது ஒரு நல்ல செய்தி தான்

சுவிட்சர்லாந்து  தமிழர்களை  மீளவும்  சொந்த  நாட்டிற்கு  அனுப்ப  நடவடிக்கை  எடுத்துக்  கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏனைய நாடுகளும் இதே நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

முன்பு போல நெகிழ்வுத் தன்மையோடு முடிவுகள் வாபஸ்  பெற்றுக் கொள்ளக் கூடிய தன்மை இப்போது இல்லை.

யுத்தம்  முடிந்த  பின்னர் பல  காரணங்களைக்  கூறி  அகதி  அந்தஸ்து பெற்ற  பலர்  இலங்கைக்கு   சென்று   திரும்பியிருக்கிறார்கள்.  அதனால், புதிதாக  வருபவர்கள்  அகதி அந்தஸ்து  கோருவதற்கான  தார்மீக  ஆதரவை இழந்து  போயுள்ளார்கள். கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட இப்போது நியாயப்படுத்த  முடியாது.

இலங்கையில் தமிழர்கள் மீண்டும் குடியேறி தம்மைப் பலப்படுத்த வேண்டும். அதனால் புதிதாக  வருபவர்களை   திருப்பி  அனுப்புவது இலங்கையில் உள்ள தமிழர்களைப் பொறுத்த வரை ஒரு நல்ல செய்திதான்.

பல காலத்திற்கு முன் வெளிநாடு  வந்தவர்கள் தம்மைப் பலப்படுத்தி விட்டதால் அவர்கள்  மீண்டும்  திரும்பப்  போவதில்லை. வெளிநாடுகளுக்கு  இடம்பெயர்ந்த  சுமார்  15  லட்சம்   ஈழத் தமிழர்களின்  5  லட்சம் தமிழர்களாவது  திரும்ப  வேண்டும். இதற்கு  ஒரே  வழி  திருப்பி  அனுப்புவது மட்டுமே.

ஏனைய 10 லட்சம் மக்களும்  புலம்பெயர்  நாடுகளில்  இருந்து  தாயகத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடட்டும்.  

No comments: