Monday, 14 February 2011

யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்தாவது நாளிதழ்

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான 'தினகரன்' நாளிதழ் அடுத்தமாதம் 2ம் திகதி யாழ்ப்பாணப் பதிப்பை  வெளியிடவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது உதயன், வலம்புரி, யாழ்.தினக்குரல், தினமுரசு ஆகிய  நான்கு நாளிதழ்கள்  வெளியாகின்றன. இந்தநிலையில் ஐந்தாவது நாளிதழாக தினகரனும் போட்டியில் இறங்கியுள்ளது.

ஈபிடிபியின் 'தினமுரசு' கடந்த ஒக்ரோபர் மாதம் தொடங்கம் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. வீரகேசரி  போன்றன  யாழ்ப்பாணத்திலிருந்து  வெளிவருவதில்லை. ஏனைய  பிரதேச பதிப்புகளே  யாழ்ப்பாணம்  வருகின்றன.

No comments: